கொழும்பில் இருந்து ரியாத்
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 265 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திரும்பியதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இன்று (10) இரவு 7 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிட வசதியுடன் அடுத்த விமானத்திற்கான இருக்கைகள் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.