அரசாங்க உத்தியோகபூர்வ
இல்லத்துக்கு பின்னால் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்துக்குப் பின்புறமாகவே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்த ஒருவருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.