நிலவும் மழையுடனான காலநிலை
காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் களனி கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும் நேற்று (13) தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பெய்துவரும் மழையின் காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கல்வி அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு அமைச்சுக்கள் செயற்பட்டுள்ளன.
இதன்படி மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்வி பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போது நிலவும் காலநிலை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது