சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில்
இருந்த காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கி தங்கியுள்ள இரண்டு சிறுவர்கள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பெப்பிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.
80 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பியதாச டயஸ் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.