தேர்தலில் போட்டியிடாவிட்டாலும்
அரசியலிலிருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இது ஒரு தற்காலிக விடைபெறுதல் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்க்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் கூறுகையில்,
அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை. பொதுஜன பெரமுனவின் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தாம் மிக இலகுவாக வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.