மாத்தளை மேல் நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், இலங்கை கிரிக்கெற் தெரிவுக் குழுவின் தலைவர் உபுல் தரங்க நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தளை மேல் நீதிமன்றம் வழங்கிய முன்னைய உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உபுல் தரங்க சார்பில் அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒக்டோபர் 8ஆம் திகதி, வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
அமெரிக்காவில் கிரிக்கெற் போட்டியில் பங்கேற்கும் தரங்காவுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்