கொவிட் தொற்றுநோய்களின் போது ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக நாட்டின் உயர்மட்ட இராணுவத் தளபதி எச்சரிக்கிறார்.
COVID 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் இராணுவத்தின் சார்பாக முதல் ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது திரட்டப்பட்ட ரூபா .450 கோடியினையும் இழக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.
"இது எங்கள் நிதிக்கு நேர்ந்தது. நானூற்று ஐம்பது கோடி அந்த தொகை ஒருபோதும் தணிக்கை செய்யப்படவில்லை. இந்த நிதிக்கும் இதுவே பொருந்தும். ”
மே 14 வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மூன்று மாத சம்பளத்தை 292500 ரூபாவை சுகதார நிதிக்காக ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார் .
சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் அட்டவணையில் அரசாங்கம் ஏன் பணத்தை செலவழிக்கவில்லை என்பதைக் காட்டுமாறு முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
தவிர்க்க முடியாத ஊழல்!
ஜனாதிபதி நிதி நிச்சயமாக மோசடி செய்யப்பட்டுள்ளது
இந்த நிதிக்காக அரசு நிறுவனங்கள் பெற்ற நன்கொடைகள் மற்றும் அப்பாவி அரசு ஊழியர்களின் பணத்தில் ஊழல் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை திருப்பித் தருமாறு கேட்கிறார்.ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலே இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் கே. பி. எகொடவெல தலைமையிலான குழு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து நன்கொடைகளை சேகரிக்கிறனர். கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 1000 மில்லியன் ரூபாவை கடந்து விட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.