குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
அறிக்கையின்படி, கடந்த சில நாட்களில் 460க்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய. வந்துள்ளது.
எவ்வாறாயினும், அவர்கள் நாட்டில் தங்கியிருந்து வேலை செய்தமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.