எதிர்வரும் பாராளுமன்றத்
தேர்தலுக்கான பிரசார மேடைகளில் இன்று (19) முதல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளார்.
இதன்படி இன்று மாலை 4 மணிக்கு தங்காலை நகரில் நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமை வகிப்பார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் கட்சி தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளது.
அடுத்த கூட்டம் கட்டுநாயக்க மற்றும் ஹோமாகம நகரில் நாளை நடைபெறவுள்ளது.