வெல்லம்பிட்டிய லாஞ்சியாவத்த
பிரதேசத்தில் நேற்று (19) இரவு பல வீடுகளில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க 3 தீ அணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.