களனி, கோனவல வீதி பகுதியில்
கைவிடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கிடமாக சொகுசு ஜீப் ஒன்று இன்று (20) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஜீப்பின் கதவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
களனி பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜே.பி கிரிஷாந்தவின் பணிப்புரையில் களனி பொலிஸ் பொறுப்பதிகாரி தேவப்பிரிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.