1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான்

வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

காலியில்   இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, பல வகையான விவாதங்களும், சவால்களும் தோற்றம் பெற்றிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில், உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே என் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன். இருந்தும் நான் மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என கூறுகின்றனர்.

அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. லும், ஊழல் கரை படியாத சஜித் பிரேமதாசவிற்கு இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பின்னர் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என பொய்யாக சொல்கின்றனர். அத்தோடு, இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்கள் கோடிக் கணக்களில் கொள்ளையிட்டு தற்போது சுகபோக வாழ்வினை வாழ்ந்து வருபவர்களே என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி