மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினரான
முகம்மது அஸாத்தின் உடலத்தின் எச்சங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து இன்று தோண்டியெடுக்கப்பட்டன.
குறித்த தற்கொலையாளியின் உடற்பாகங்ஙகள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிராக அந்த மாவட்டத்தின் தமிழ் இந்து மக்கள் கடும் எதிர்பைத் தெரிவித்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
இதனையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பல சட்டவாதிகள் தங்களது வாதங்களை முன்வைத்து குறித்த தீவிரவாதியின் சடலத்தை அங்கிருந்து தோண்டியெடுக்க உத்தரவிடுமாறு மன்றைக் கோரினர்.
இந்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிவான் ஏ.சீ றிஸ்வான் அவர்கள் தீவிரவாதியின் சடலத்தை தோண்டியெடுக்க உத்தரவிட்டிருந்தார் அதனடிப்படையிலேயே சடலம் இன்று 2 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.