கோத்தாபய ராஜபக்ஷவுக்காக தாமரை மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்ட பிரசார வேலைத்திட்டத்திற்கு அப்பால் சென்ற தனியான சமூக ஊடக நடவடிக்கை தற்போது
திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக மிகவும் நம்பிக்கைக்குரிய தரப்பினரிடத்திலிருந்து theleader.lk க்கு அறியக் கிடைத்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக காலாவதியாகிப் போன மோசடிமிக்க அரசியல்வாதிகளுக்கு பதிலாக புதிய அரசியல்வாதிகளின் தேவை உணரப்படும் இந்த நடவடிக்கை, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பதிலாகவும், அதன் பின்னர் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பாராளுமன்றத்தினுள் இருக்கும் அனைவரும் மோசடிக்காரர்கள் என்பது இந்த நடவடிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதுடன், இந்நடவடிக்கையின் சிறப்பான விடயம் என்னவெனில் இது கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் வேலைத்திட்டம் என்பதை அறிந்தோ அல்லது அறியாமலோ சில கலைஞர்கள் மாத்திரமின்றி, சமூக ஊடகச் செயற்பாட்டார்களும் “தியவண்ணா எதிர்ப்பு” ஐ ஒரு பேஷனாக அணிந்து கொண்டு அதற்கு பங்களிப்பு செய்து கொண்டிருப்பதாகும்.
இது அவ்வாறான ஒரு கலை படைப்பாகும்