தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான நண்பரான பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர, “கவலையின்றி, அச்சமின்றி
வாழ்தல்” தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது கோத்தாபய செய்த, கூறிய விடயங்கள் தொடர்பில் சமூகத்தினுள் அச்சம் வேரூன்றியிருக்கும் போது, திலித் தனது முகநூல் பக்கத்தில் “அச்சம் ஏற்படுவது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஒன்றைப் பற்றியதாகும்” என தெரிவித்துள்ள பதிவானது அரசியல் ரீதியில் முக்கியமானதாகும். அவரது முகநூல் பதிவு எவ்வித திருத்தங்களும் இன்றி கீழே தரப்படுகின்றது.
மோட்சம்
ஏன் நான் மோட்சம் பெற வேண்டும்? எளிதாகக் கூறுவதாயின் நான் மோட்சம் பெற வேண்டியது கவலையின்றி, அச்சமின்றி வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதனை விட அதிகமாக எதுவும் தேவையில்லை.
கவலை ஏற்படுவது எதிர்காலத்திற்கு அல்லது தற்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயத்திலாகும். அச்சம் ஏற்படுவது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஒன்றைப் பற்றியாகும்.