ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீலங்கா நிதகஸ் பக்ஷய ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக இரு கட்சிகளுக்கிடையே நடைபெறும் கூட்டம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதன் போது பத்திரிகைச் சந்திப்பொன்றும் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி பதிவு செய்வதாயின் மார்ச் 10 ம் திகதி நாடாளுமன்றத்தினை கலைக்க வேண்டும் என்று இரு கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.புதிய கூட்டணி பதிவு செய்வதில் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிய வருகின்றது.