தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற தவறியுள்ளமையால் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உள்ளோம் இது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என்று சி. வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அவர்களது சொந்த தேவைகளை சரியாக பூர்த்தி செய்துள்ளனர் மக்களுக்கு அவர்களால் எவ்வித நன்மையும் இல்லை.
இப்போது கூட்டமைப்பில் இருக்கும் 05 கட்சிகளில் 02 கட்சிகள் எம்முடன் இருக்கின்றன.
எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என சி.பி.விக்னேஸ்வரன் சிங்கள மொழியில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.