எனது மிகுதிகாலத்தை ஓய்வாகக் கழிக்கலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை அதனால் மீண்டும் நான் பொதுத்தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
எனது 26 வருட அரசியல் காலத்தில் 05 வருடங்கள் ஜனாதிபதியாகவும் இருந்துள்ளேன். தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் நாட்டிற்கு செய்யலாம் என இம்முறையும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.