புறக்கோட்டை மெனிங் சந்தையிலும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில ஊர்களையும் மரக்கறிகளின் பெயர்களையும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தெரிவிப்பதானது வேடிக்கையாக உள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் மரக்கறிகளின் விலை குறைப்பானது மக்களை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை.