இலங்கை விமானக்கூட்டுதாபானத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் கபில சந்தசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேனாயக்கவின் வங்கிக்கணக்கிலிருந்து 8 இலசம் டொலர் செபர் பியத் கோல்டிங் நிறுவனத்தின் அதிகாரி நிமால் பெரேராவின் பெயருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று (19) கோட்டே நீதிமன்ற விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
நிமல் பெரேரா நாமல் ராஜபச்சவிற்கு எதிராக கோட்டே நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தவராவார்.
இவரை விசாரணை செய்த கோட்டை நீதிமன்றம் இவரின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்துள்ளதுடன் அவர் வைத்திருக்கும் 4 வங்கி கனகுகள் பற்றியும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.