கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் செல்வதற்குள் ஆட்டம் கண்டுள்ளதாக லிகினி பெர்னாந்து தெரவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் ஆட்சியை முன் கொண்டு செல்வதில் தடுமாருகின்றது.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் 3 பிரச்சினைகளை சொல்லி ஆட்சிக்கு வந்தது.
முதலாவது MCC ஒப்பந்தம்.
MCC ஒப்பந்தம் நாட்டிற்கு கடுமையான நாசத்தை ஏற்படுத்தும் எனப்பயமுருத்தி ஆட்சிக்கு வந்தனர் .
இரண்டாவது உதிர்த்த ஞாயிறு தாக்குதல்
நாட்டில் பாதுகாப்பிற்கு பாரிய ஓட்டை விழுந்துள்ளதாக கூறினர்.இப்போது நிலைமை ஐ நா வரைக்கும் நாட்டை இழுத்துச் சென்றுள்ளது.
மூன்றாவது மத்திய வங்கிக்கொள்ளை
மத்திய வங்கிக்கொள்ளையர்களை பிடிப்போம் சிறையில் அடைப்போம் என்று மக்களுக்கு உத்தரவாதம் வழங்கினார்கள். இப்போது நிலைமை என்னவாயிற்று
யார் யாரை சிறையில் அடைப்பது இவர்களா மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள் என்று கூரியுள்ளார்.