கொழும்பு சர்வதேச நிதி நகரம் (CIFC) நிறுவனம் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுக நகரம் இரண்டாவது முறையாகவும் சேதத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட வேலை 2019 நடுப்பகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது அதி வேகமான காற்றினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்மாண பணிகளை மேற் கொள்ளும் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் கர்ச செனரத் the morning பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில் அதிகமான அலைகள் மேல் எழும்பியதால் செப்பனிட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் 50 மீட்டர் கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் .
இவற்றை மீள நிர்மாணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பொறியியலாளர்கள் அந்த பணியை செய்ய வில்லை அதனது சேத விபரம் பற்றியும் சொல்லவில்லை.
இது தொடர்பாக கருத்து கேட்டறிய முன்னால் தலைவர் இப்போதைய தலைவர் ஆகியோரை தொடர்பு கொண்டும் பதில் கிடைக்க வில்லை என்பதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.