எதிர்வரும் பொதுத்தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.தன்னால் முடிந்தளவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவரும் முன்னால் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் எனக்கு எந்தக் கட்சியில் தேர்தல் கேட்டாலும் பரவாயில்லை ஏழை மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது அவா என்று கூறினார்.
வருகின்ற பொதுத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.