இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பின்னர் கோட்டா ஜனாதிபதி சஜித் பிரதமர் என்றால் முன்னர் இருந்த ஆட்சியில் மைத்திரி - ரணில் முருகல் நிலை போல தொடர வாய்ப்புள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உதிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விளக்கமளிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றி விளக்கமளித்து விட்டு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஐ.தே.க கூறியது கோட்டா ஜனாதிபதி சஜித் பிரதமர் இன்று அந்த சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
சில சமயம் கோட்டா சஜித் அரசாங்கம் அமைந்தால் கடந்த மைத்திரி - ரணில் அரசு போல் முருகல் நிலையுடனே தொடரும் என்று குறிப்பிட்டார் .