பொருட்களின் விலை குறையாத நிலையில் மக்கள் விசனம் அடைந்திருப்பதாகவும் அரசாங்கத்தின் மேல் கடுமையான கோபத்தில் மக்கள் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.
நான் மக்களின் பக்கம் இருக்கின்றேன் தொடர்ந்து முதலாளிகள் நினைப்பது போல் செயற்பட முடியாது என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.