வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் போட்ட சத்தத்திற்கு ஜெனிவாவில் அடங்கி போய் விட்டாராம்.
ஊடகவியலாளர் உசிது கிருகுல சூரிய அவரின் முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் UNHRC தினேஷ் குணவர்த்தனவின் கதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாராளுமன்றத்தில் சத்தம் போட்ட தினேஷ் ஜெனிவாவில் மிகவும் அப்பாவி போல் காணப்பட்டார். நான் நினைத்தேன் அமெரிக்கா விலகிச் சென்றது போல் இலங்கையும் விலகிச் செல்லும் என்று ஆனால் அப்படி நடக்கவில்லை.
எல்லாம் உண்மை கடவுளின் ஆசி கிடைக்கட்டும் என்று உரையை தொடங்கினார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் கருத்தை சொன்னார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 43வது அமர்விலே தினேஷ் குணவர்த்தன பேசுகையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் இப்போது ஜெனீவா எடுத்திருக்கும் தீர்மானத்தை இலங்கையால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
2019 மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுத்த (40/01) தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தினேஷ் கேட்டுக்கொண்டார். அத்துடன் 40/01 தீர்மானம் 2015 அக்டோபர் மாதம் முன்வைத்த 30/01 தீர்மானம் ,2017 மார்ச் மாதம் முன்வைக்த 34/01 தீர்மானத்தையும் ஐ.நா மனித உரிமை பேரவை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தினேஷால் ஐ.நா மனித உரிமை பேரவையியல் ஒன்றுமே செய்ய முடியவில்லை.என்று ஊடகவியலாளர் உசிது கிருகுல சூரிய அவரது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.