முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் மாத்தறையில் இருக்கும் வீட்டில் இன்று 27 இரவு பிரித் வைபவம் ஒன்று இடம் பெறவிருப்பதாகவும் இதனைத்தொடர்ந்து நாளையும் விசேட வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.
அவரின் பெற்றோறுக்காக ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் அவரது மாத்தறையில் இருக்கும் இல்லத்தில் பிரித் நிகழ்வும் அன்னதானம் வழங்குதலும் இடம் பெறுவது வழக்கமாகும் இம்முறை இந்த நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர போட்டியிடவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இன்று அவரின் வீட்டில் நடைபெறவிருக்கும் பிரித் நிகழ்வைத் தொடர்ந்து மங்களவுடன் பயணம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.