கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி மின்சார சபை நட்டமடைவதற்கான காரணம் அவசர மின்சார கொள்வனவுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தின் போது அவசர மின்சார கொள்வனவிற்கு எதிர்ப்பு தெரிவித்த தற்போதைய அமைச்சரும் குறித்த வழிமுறையை அணுகியுள்ளமை வருத்தமளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.