நாட்டில் இடம்பெறும் பொருளாதார விடயம் சம்பந்தமான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இச் சந்திப்பில் அனைத்து கெபினெட் அமைச்சர்கள் மற்றும் புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இச்சந்திப்பு வாரம் ஒரு முறை ஜனாதிபதியின் செயலாளர், நிதியமைச்சின், செயலாளர்,பிரதமரின் செயலாளர் ஆகியோர் சந்தித்து நாட்டின் பொருளாதார விடயமாக கலந்துரையாடல் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் முடிவுகளை உடனுக்குடன் தனக்கு அறியத் தருமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கூறியுள்ளார்.