எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
சமகி ஜன பலவேகய அமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடன் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
உண்மையான தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான உருவாக்கப்பட்ட கூட்டணியாக சமகி ஜன பலவேகய அமைப்பை குறிப்பிடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.