எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் இன்று 29 தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
அதனைத் தொடந்து அவரின் மாத்தறை இல்லத்தில் விசேட வைபவம் ஒன்று இடம்பெறவிருக்கிறது இன் நிகழ்வில் ஐ.தே. க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார்.
பொதுத்தேர்தலின் போது ஐ.தே. க உடைந்து விடக்கூடாது என்பதில் மங்கள சமர வீர கவனமாக இருக்கின்றார் இதனால் நேற்றைய பிரித் நிகழ்விற்கு சஜித் மற்றும் ரவி கருணானாயக்கவை அழைத்து இரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார்.
ஐ.தே. க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று மாத்தறையில் நடைபெறவிருக்கும் விசேட நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் அறியக்கிடைக்கின்றது.