கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் அங்கோட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
ஸ்ரீ ஜெயவர்தன புற மற்றும் ராகம வைத்தியசாலையில் கொரோன வைரஸ் என சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வரும் இருவர் தங்களை அங்கொடை IDH வைத்தியசாலைக்கு இடமாற்ற வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
IDH வைத்தியசாலையின் வைத்தியட்சகர் ஹசித அத்தநாயக கூறுகையில் இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் என்றார்.
அவர்கள் இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.
இவர்கள் இருவருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.