அனுராதபுரம் பகுதியின் கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
49 வயதுடைய கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி வேலைக்கு சென்று நேற்று வீட்டுக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.