முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சமஹி ஜனபலவேகயுடன் சேர்க்க வேண்டாம் என்று தகவல் கிடைக்கின்றது.
அடிப்படைவாதிகள் குழு ஒன்று சஜித் பிரேமதாசவிடம் ரிஷாட்டை சேர்க்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களிலிருந்து theleader.lk க்கு கிடைத்துள்ளது.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலை ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருப்பவர்கள் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக்கருத்தை உருவாக்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
ரிசாட் பதியுதீன் சமகி ஜனபல வேகயவுடன் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதை இனவாதிகள் வெறுக்கின்றனர் என்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.