இந்த நாட்டை ஆற்சி செய்தவர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற காலம் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முடிவுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இன்றில் இருந்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் மாத்திரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.