மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றசாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பிடிஎல் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் பிடிஎல் நிருவனத்தின் மேலாளர் கசுன் பலியசேன உட்பட பலர் தொடர்பில் சட்டமா அதிபரினால் கைது செய்வதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் தேடப்பட்டு வருகின்றார். ரவி கருனாயக்க குற்றஞ்சாட்டப்பட்டதால் முன்பு அவர் வகித்த அமைச்சுப்பதவியையும் ராஜினாமா செய்திருந்தார் அர்ஜுன் அலோசியசுக்கு பிணை வழங்கப்பட்டது எது எப்படி இருப்பினும் சட்டமா அதிபர் இவர்களைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையைப்பெருமாறு காவல் துறை அதிபருக்கு பணிப்புரை விதித்துள்ளார்.