கண்டி மாவட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள் அணைவரும் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் இணைகிறார்கள்.
நேற்று 05 கண்டியில் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் 218 மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்களும் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் சஜித்துடன் இணைந்து கொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் முன்னால் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சமகி ஜன பல வேகய கட்சியை வெற்றி பெறச் செய்து நாட்டையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.