பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி தமிழ் மக்களில் பெரும்பாண்மையானோர் எவ்வித நீதியும் இல்லாமல் தங்களது போராட்டம் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
யுத்தத்தின் போதும் அதன்பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி இதுவரையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கடந்த 1000 நாட்களுக்கும் அதிகமாக தங்களது உறவுகளைத் தேடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளனர்.
தங்களது உறவுகளை தேடி இந்தப் போராடத்தில் பங்கு பற்றியோரில் 60க்கும் அதிகமானோர் இறந்து விட்டதாகவும் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 வது அமர்வில் தெரிவித்துள்ளார்.