நல்லாட்சி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் இதுவரையில் நடைமுறையில் இருக்குமாயின் 1 லீட்டர் 20 ரூபாவால் குறைந்திருக்கும் அத்துடன் பேருந்துகட்டணம்,முச்சக்கர வண்டி கட்டணம் என்பனவும் குறைந்திருக்கும் இதனால் மக்களுக்கு இலகுவாக இருந்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தால் உலக சந்தையின் எரிபொருள் விலையை கருத்திற்கொண்டு வாடிக்கையாளரின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10 ம்திகதி எரிபொருள் விலையை தீர்மானிக்ககூடியதாக இருந்தது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது வாடிக்கையாளர்களுக்கும் அதை கிடைக்கச்செய்ய வேண்டும் அந்த வகையில் 2025-2000 ரூபாவாக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை 1500 ரூபா வரை நல்லாட்சி அரசாங்கத்தில் குறைக்கக்கூடியதாக இருந்தது என்று கூறினார்.