சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய கூட்டணிக்கு இன்று ரவி கருணாநாயக்க எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அன்னச்சின்னத்தை கொடுத்திருப்பதாக அறியக்கிடைகின்றது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில் இந்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.
ரவி கருணாநாயக்கவிற்கு நெருங்கியவர்கள் புதிய ஜனநாயக் கூட்டணியின் அன்னச்சின்னதை சமகி ஜன பல வேகய கூட்டணிக்கு கொடுப்பதற்கு முன்பு நிபந்தனை விதித்திருந்தனர் ஆனால் இன்று 07எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ரவிகருணாநாயக்க அன்னச்சினந்தை கொடுத்திருந்தார்.
யானைக்காரர்களால் தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம்
இந்நேரத்தில் ஐ.தே.க பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ .தே. க யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேர்தல் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.