ஐ .நா மனித பேரவையில் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குனவர்த்தன தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தினேஷ் மீது கடுமையான கோபத்துடன் நடந்துள்ளதாக தெரிய வருகின்றது. அவருக்கு கொடுத்த பொறுப்பை அவர் மீறிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
19 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
19 வது திருத்த சட்டம் இந்நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதால் அதனை முற்றாக நீக்க வேண்டும் என்று 05ம் திகதி நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதற்கு இந்த 19 வது திருத்த சட்டம் தடையாக இருக்கின்றது எனவே அதை சம்பூரணமாக நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.