சமகி ஜனபலவேகயவின் தோற்றத்துடன் ஐ.தே.க இரண்டாக உடைவதைத் தடுப்பதற்காக ஐ .தே.க யின் தலைமைப் பொறுப்பை கருஜயசூர்யவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் 2 ம்திகதி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இந்த சந்திப்பில் ராஜித சேனாரத்ன ரவி கருணாநாயக்க கரு ஜயசூர்ய ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். இதன்போது கட்சி இரண்டாக ஆக உடைவதைத் தடுப்பதற்காக தலைமைப்பொறுப்பை கரு ஜயசூர்யவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்போது ரணில் கட்சியின் தலைமை வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.