ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டி இடவுள்ளததாக அறியக்கிடைக்கின்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சி புளொட்,டெலோ ஆகிய கட்சிகள் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும் அதேவேளை முன்பு இவர்களுடன் இருந்த இபிஆர்எல்ப் விக்னேஸ்வரனின் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. இபிஆர்எல்ப் தவிர்ந்த முன்னால் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமை தாங்கும் தமிழ் ஈழ சுயாதீன கட்சி மற்றும் டெலோ கட்சியில் இருந்து விலகிய எஸ்.சிறி காந்தா ,எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோர் விக்னேஸ்வரனுடன் இணைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.