ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார் குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சுதந்திரக் கட்சியின் 14 இலட்சம் வாக்குகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறிய தயாசிறி முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதியின் செயற்பாடும் சங்கடமாகவுள்ளதாக கூறுகிறார் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.