1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதியின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தால் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தனக்கு கஷ்டமாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூரியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

19 வது திருத்த சட்டத்தில் பிரதமருக்கே அதிகமான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு வேலைகளைச் செய்ய முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

19 வது திருத்தச்சட்டத்தால் தன்னால் அன்னனுடன் இணைந்து பணியாற்ற முடியாதுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளதாக,

நேற்று (08) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது விமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு 1௦௦,௦௦0 பேருக்கு தொழில் வாய்ப்பு என்ற அரசாங்கத்தின் திட்டங்கள் அப்படியே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி