முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன ஊடாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடமாட்டார் என்றும் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கும் யோசனை உள்ளதாகவும் பொதுஜன பெரமுன கட்சித்தகவல்களிளிருந்து தெரிய வருகின்றது ஆனால் தேசியப்பட்டியல் யோசனையை மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா சுத்ந்திரகட்சியின் பிரச்சார செயலாளர் வீரகுமார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில் இப்படியான கருத்துக்களால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் ஐ.தே.க செல்ல வாய்ப்புள்ளதால் ஜனாதிபதியும் பிரதமரும் நாய்களின் கதைகளைக் கேட்காது தீர்க்கமான முடிவொன்றை எடுக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.