உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாகவே இச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அந்த வகையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 221.24 புள்ளிகளால் குறைவடைந்து 5121.91 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
வரலாற்றில் ஒரு நாளில் மொத்த விலைச் சுட்டெண்ணில் 300.59 புள்ளிகள் குறைவடைந்தது 2010/10/12 ஆகும்.
எனவே இன்றைய நாளின் இந்த வீழ்ச்சியான வரலாற்றின் 2 ஆவது அதி கூடிய வீழ்ச்சியாகும்.