எரிபொருள் சூத்திரம் இருந்திருப்பின் 2020 மார்ச் 10 ம்திகதி டீசல் ஒரு லீட்டர் 74 ரூபாவாகவும் பெட்ரோல் ஒரு லீட்டர் 107 ரூபாவாகவும் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்திருக்கலாம் என முன்னால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் இருக்கும்போதே உலக சந்தையில் ஏற்படும் விலைச்சூத்திரம் கவனத்தில் எடுக்கப்பட்டு நாட்டில் உள்ள வாடிக்கையாளரகளுக்கு ஆகக் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க கூடியதாக இருந்தது ஒவ்வொரு மாசமும் 10 ம்திகதி இதை நடைமுறைப்படுத்தினோம்.
இபோது உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளமையால் அதனை உடனடியாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொன்டுள்ளார்.