பாராளுமன்றத்திற்குள் மூன்றில் இரண்டு பெறுவதென்பது பேச்சுக்கு வேண்டுமானால் பெறக்கூடியதாகவிருக்கும் ஆனால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சாத்தியமற்றது என பவித்ரா தேவி வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
11ம் திகதி இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
பவித்ரா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் யுத்த வெற்றியின் பின்னர் பாராளுமன்றத்துக்குள் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது பெற முடியாது இரத்தினபுரி மாவட்டத்தில் 7 ஆசனங்கள் இருக்கிறது அதையும் பெற்று பொதுஜன பெரமுனவிற்கு 113 ஆசனங்கள் எடுத்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.