பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொது தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் இதுவரை இல்லை என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர் சுயமாகவே தனிமைப்படுத்தும் செயற்பாடுகளில் ஒன்றிணைவது முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.